எண் கனவெல்லாம் குவித்து
உன்னை கையில் தாங்கிய
முதல் நொடி ஈன்ற தாய் போல
பெருமை கொண்டேன்
எத்தனை எத்தனை நாட்கள்
உன்னை கையில் ஏந்த
துடித்திருப்பேன் - தூக்கம்
தொலைத்து இருப்பேன்
புதிதாய் பிறந்த சேயாய்
உன் மேல் துரும்பும்
தீண்டாமல் பார்த்து கொண்டும்
பொய்யாய் துடைத்து விட்டேன்
என் விழியால் கண்ட
உலகை விட உன் -
வழியே கண்டவுலகில்
புதுமை கண்டேன்
எங்கே சென்றாலும்
உன்னை அள்ளி தூக்கி
என் பயணங்களில்
உன்னை சேர்த்துக்கொண்டேன்
எத்தனை பேருக்கு நினைவுகளை
திரும்பிப்பார்க்க வைத்திருப்பேன்
உன்னால் 'என் அழகிய காமிராவே..'