Wednesday, 15 February 2017

என் காதல் கண்ணீரில் கரைந்து விட்டது


அடடா இந்த காதல் என்னை கொல்லுதே
அய்யோ என்னை அது அழுது புலம்ப சொல்லுதே

கூண்டினுள்ளே பறவை போல சிறகு இருந்தும் பறக்கலையே
நீல வண்ண கடலலை போல கரையை கூட தாண்டலையே
வலிகள் இருந்தும் வார்த்தையில்லை
வழிகள் தெரிந்தும் போகவில்லை

சிந்திய கண்ணீர் போதுமா
இன்னமும் பொய்கள் வேணுமா
உன் பதிலும் என்ன மௌனமா
சொல்லடி எந்தன் கண்ணம்மா

என் கரம் பிடித்து கூட்டி சென்று
பாதி வழியில் பிரிந்து விட்டாள்
நான் குருடன் என தெரிந்தும் ஏனோ
காட்டின் நடுவில் தவிக்க விட்டாள்

பூ என்று உன்னை நினைத்தேன்
கொடும் புலி என்று காட்டிவிட்டாள்
இருட்டிற்குள் வெள்ளை அடித்து
எனை இன்று ஏமாற்றி விட்டாள்

உன் ஆசைகளின் முன் நான்
பிச்சைகாரன் ஆனேன்
நீ கட்டும் கோட்டைகளுக்காக
என் கனவுகளை அடகு வைக்காதே

நான் வீழ்வேன் என நினைத்தாயோ பெண்ணே
நம் காதல் என் கண்ணீரில் கரைந்து விட்டது

No comments:

Post a Comment