Sunday, 19 February 2017

அவளை மறந்து போனோம்


அவர் மேலே போனார்
இவர் மெரினா போனார்
சின்னவர் உள்ளே போனார்

இந்த களேபரங்களில்
அவள் மறைந்து போனாள்

இல்லை இல்லை காமத்தின்
கோர பிடியில் அவள் அன்றே
மறைந்து போனாலும்
நாற்காலி ஆட்டத்தில் நாம்
அவளை மறந்து போனோம்
மறக்கடிக்க செய்யப்பட்டோம்

கர்ப்பிணி பெண் அவள்
கருவில் சிசுவோடு சிதைக்கப்பட்டாள்
தீயில் உயிரோடு வறுக்கப்பட்டாள்

மாடி வீட்டு மங்கையாய்
இருந்தால் அவள் தலைப்பு செய்தியை
தாங்கி இருப்பாள்
பாவம்- கூரை வீட்டின் குயில் தானே
அவள் மனிதி இல்லையே-ஓரத்திலும்
இடம் இல்லை

தலைநகர் என்றால் நாங்கள்
மெழுகுவர்த்தி ஏந்துவோம்
அவள் எங்கோ வரைபடத்தில் இடம்
பிடிக்காத ஊரில் பிறந்தவள் தானே
கண்ணீர் கூட சிந்தமாட்டோம்

பின்னே எங்கே நீதி?
போய் வேலையை பார்

No comments:

Post a Comment