நீ விதை என்றால்
நான் உரம் என்பேன்
நம் காதல் மரம் என்பேன்
நீ ரத்தம் என்றால்
நான் சதை என்பேன்
நம் காதல் உயிர் என்பேன்
நீ வரி என்றால்
நான் வடிவம் என்பேன்
நம் காதல் மொழி என்பேன்
நீ இலக்கியம் என்றால்
நான் இலக்கணம் என்பேன்
நம் காதல் தமிழ் என்பேன்
நீ எதுகை என்றால்
நான் மோனை என்பேன்
நம் காதல் கவிதை என்பேன்
நீ குளிர் மேகம் என்றால்
நான் அதில் கருமை என்பேன்
நம் காதல் மழை என்பேன்
நீ அலை என்றால்
நான் நுரை என்பேன்
நம் காதல் கடல் என்பேன்
நீ வளர் என்றால்
நான் பிறை என்பேன்
நம் காதல் முழு நிலவு என்பேன்
நீ நிலவு என்றால்
நான் விண்மீன் என்பேன்
நம் காதல் இரவு என்பேன்
நீ மனம் என்றால்
நான் உடல் என்றால்
நம் காதல் காமம் என்பேன்
நீ வழி என்றால்
நான் நடை என்பேன்
நம் காதல் பயணம் என்பேன்
நீ புவி என்றால்
நான் விசை என்பேன்
நம் காதல் உலகம் என்பேன்
நீ வலி என்றால்
நான் கண்ணீர் என்பேன்
நம் காதல் காயம் என்பேன்
நீ சிரிப்பு என்றால்
நான் அழுகை என்பேன்
நம் காதல் குழந்தை என்பேன்
நீ வெட்கம் என்றால்
நான் நாணம் என்பேன்
நம் காதல் பெண்மை என்பேன்
நீ வீரம் என்றால்
நான் வேகம் என்பேன்
நம் காதல் ஆண்மை என்பேன்
நீ கோபுரம் என்றால்
நான் கருவறை என்பேன்
நம் காதல் கோவில் என்பேன்
நீ உமை என்றால்
நான் சிவன் என்பேன்
நம் காதல் கடவுள் என்பேன்

Very nice! Keep writing more :-)
ReplyDeleteஉங்கள் நேரத்திற்கும், கருத்திற்கும் நன்றி...
DeleteI will keep on update my blog...Please Keep Supporting...Keep on Supporting..Read my another poetry #தனிமைக்காதலன் in the same blog.
Osm lines!!! arun...impressed with your lines!!!
ReplyDeleteஉங்கள் நேரத்திற்கும், கருத்திற்கும் நன்றி...
DeleteI will keep on update my blog...Please Keep Supporting...Keep on Supporting..Read my another poetry #தனிமைக்காதலன் in the same blog.
உங்கள் நேரத்திற்கும், கருத்திற்கும் நன்றி...
ReplyDeleteI will keep on update my blog...Please Keep Supporting...Keep on Supporting..Read my another poetry #தனிமைக்காதலன் in the same blog.